திருமலையில் பக்தர்களை அனுமதிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இலவச தரிசன டிக்கெட் மூலம், நாள்தோறும் 10, 000 உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மூலம், 20 ,000பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதன்படி, ஜனவரி 4-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையான காலத்துக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. காலை 9 மணிமுதல் இணையதளம் மூலம் டிக்கெட் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3-ம் தேதி முதல் நாள்தோறும் 6,000 வெளியூர் பக்தர்களுக்கு இலவச தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட உள்ளது.