24 மணி நேரத்தில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. தினசரி பாதிப்பு 1.8 லட்சமாக உயர்ந்துள்ளது.

அத்துடன், கொரோனாவால் ஏற்படும் மரணங்களும் அதிகரிக்கின்றன. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் தடுப்பூசி போடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. பாதிப்புகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.