இந்தியாவில் கொரோனா நிலவரம்

சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்
சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,36,89,453 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,61,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 879 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,71,058 ஆக உயர்ந்துள்ளது.நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 12,64,698 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் நேற்று வரை 10,85,33,085 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.