இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு: சீனா அதிருப்தி

கிழக்கு லடாக்கில் ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன், சீனா செயல்பட்டு வருகிறது என டில்லியில் அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீனா, எல்லை பிரச்னையில் 3வது நாடு தலையிட தேவையில்லை என தெரிவித்துள்ளது.

இந்தியா, அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையேயான மூன்றாவது மாநாடு, டில்லியில் நேற்று (அக்.,27) நடந்தது.

இதில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர், இந்திய தரப்பில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றனர். பின்னர் அமெரிக்க அமைச்சர்கள் கூறுகையில், கிழக்கு லடாக் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன், சீனா செயல்பட்டு வருகிறது.