Human Sacrifice: மூட நம்பிக்கையால் 6 மாத பெண் குழந்தை நரபலி

human sacrifice
6 மாத பெண் குழந்தை நரபலி
Human Sacrifice: தஞ்சாவூர் அருகே 6 மாத பெண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொல்லப்பட்ட விவகாரத்தில், திடீர் திருப்பமாக மூட நம்பிக்கையால் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கொலை வழக்கில், அந்த பெண் குழந்தையின் தாத்தா, பாட்டி, மந்திரவாதி ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த மல்லிப்பட்டினத்தில் சேர்ந்த நசுருதீன்- சாலிகா தம்பதியினருக்கு காஜா ராய் என்ற 6 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்து விட்டதாக கூறிய பெற்றோர், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்காமல், அந்த ஆறு மாத பெண் குழந்தையை அடக்கம் செய்து உள்ளனர்.

இது குறித்து காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைக்கவே, உடனடியாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே போலீசாரின் விசரணையில், நஸ்ருதீன் சித்தப்பா அசாருதீனுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ரத்தமின்றி நரபலி கொடுத்தால் நல்லது நடக்கும் என்று முகமது சலீம் என்ற மந்திரவாதி அறிவுறுத்தியுள்ளான்.

அதன் பெயரில் அந்த ஆறு மாத பெண் குழந்தையை அசாருதீன் மனைவி ஷர்மிளா பேகம் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அசாருதீன், ஷர்மிளா பேகம், மந்திரவாதி முகமது சலீம் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: Rajendra balaji: முன் ஜாமீனுக்காக உச்ச நீதிமன்றத்தை நாடிய ராஜேந்திர பாலாஜி..!

Bhringraj Oil: தலைமுடி அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி இலைகளை தொடர்ந்து தடவிவர முடி கருமையாக செழித்து வளரும், முடி உதிர்தலும் கட்டுப்படும்.

கீரையை சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தை பெறும்.

பெண்களுக்கு கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும் நரையும் மாறும்.

இப்படிப்பட்ட கரிசலாங்கண்ணி எண்ணெயை கிராம புறங்களில் பலர் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கரிசலாங்கண்ணி எண்ணெயை வாங்க விரும்பினால் 9791886213 என்ற நம்பருக்கு போன் அல்லது வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.