நாடுமுழுவதும் சந்தையில் விற்கப்படும் காய்கறிகளில் 9.5 சதவீதம் சாப்பிடமுடியாதவை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) நாடு தழுவிய ஆய்வில் சந்தைகளில் விற்கப்படும் காய்கறிகள் உண்ண முடியாதவை என்று கண்டறியப்பட்டு உள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் வெளியிட்டு உள்ள புதிய அறிக்கையின்படி, இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் விற்கப்படும் காய்கறிகளில் 2 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை விஷம் கலந்துள்ளதாகவும், அவை உண்ணக்கூடியவை அல்ல என தெரிவித்துள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் நாடு தழுவிய விசாரணையில், சந்தையில் விற்கப்படும் காய்கறிகளில் 9.5 சதவீதம் சாப்பிடமுடியாது என்று தெரிய வந்துள்ளது, ஏனெனில் இவற்றில் ஈயம் மற்றும் காட்மியம் போன்ற தீங்கு விளைவிக்கும் கன உலோகங்களின் அளவு குறைந்தது இரண்டு முதல் மூன்று வரை உள்ளது. பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட பல மடங்கு அதிகம் ஆகும்.
மிக மோசமான நிலைமை மத்திய பிரதேசத்தில் உள்ளது. வளர்ந்த மற்றும் விற்கப்பட்ட காய்கறிகளில் 25 சதவீதம் விசாரணையில் தோல்வியடைந்துள்ளன. இரண்டாவது சத்தீஸ்கார் மாநிலம்ஆகும். அங்கு 13 சதவீத காய்கறிகளில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.