கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

30.11.2021: கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

இந்நிலையில் கனமழை காரணமாக தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.