கனமழையில் தவிக்கும் கேரளா மாநிலம் !

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இதை தவிர 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளதை அடுத்து, கேரளாவின் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.

இதனால் பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.