தமிழக மக்களே உஷார்..தொடரும் கனமழை !

TN Rain
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது.மழை பெய்யும் மாவட்டங்கள் எல்லாம் சாலைகள் தண்ணீர் தேங்கியுள்ளன.தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

வங்கக்கடலில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகின்றது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்தில் 21 மாவட்டங்கைளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,டெல்டா மாவட்டங்கள்,திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை,கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.