தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பல இடங்களில் ஏரிகள், அணைகள் நிரம்பி கொண்டிருப்பதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க: தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 உயர்வு