கனமழை காரணமாக சுரங்கப்பாதை மூடல் !

தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

மேலும் தலைநகர் சென்னையில் கனமழை பெய்து வருகிறது.சென்னையில் கனமழையால் மழைநீர் தேங்கியதால் 5 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன சுரங்கப்பாதை,தி.நகர் மேட்லி சுரங்கப்பாதை,கே.கே.நகர் ராஜமன்னார் சாலை,வளசரவாக்கம் மெகா மார்ட் சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லுார் வரை போக்குவரத்து தடைசெய்யப்பட்டடுள்ளது, தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது