அமைச்சர் துரைக்கண்ணு மிகவும் கவலைக்கிடம்…!

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 13-ஆம் தேதி கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட, தமிழக வேளாண்துறை அமைச்சர் ஆர். துரைக்கண்ணு, காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், 72 வயதான அமைச்சருக்கு இதர பல நோய்கள் இருப்பதாகவும், அவரது சமீபத்திய சிடி ஸ்கேன் அறிக்கையின்படி, அவரது நுரையீரல் 90% பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அதோடு அவர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ சப்போர்ட்டில் இருப்பதாகவும், சிறப்பு மருத்துவர்கள் குழு தங்களது அதிகபட்ச சப்போர்ட்டை வழங்கி வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,” வென்டிலேட்டர் மற்றும் எக்மோ சப்போர்ட்டில் தொடர்ந்து அவர் இருந்தாலும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகதான் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.