அதிகரிக்கும் பச்சை பூஞ்சை பாதிப்பு

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு கரும்பூஞ்சை பாதிப்பு ஏற்படுவதை போல தற்போது பச்சை பூஞ்சை பாதிப்பு ஏற்பட தொடங்கியுள்ளது.

பூஞ்சையின் நிறம் பச்சையாக இருப்பதால் பச்சை பூஞ்சை பாதிப்பு என கூறப்படுகிறது. தீவிர கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதாலும், சிகிச்சையின் போது ஸ்டீராய்டுகள் பயன்படுத்துவதால் பூஞ்சை பாதிப்புகள் ஏற்படுகின்றது.

கரும்பூஞ்சை பாதிப்பு போல் அல்லாமல் பச்சை பூஞ்சை பாதிப்பை எளிய ரத்த பரிசோதனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம். கருப்பு, பச்சை மட்டுமல்லாமல் வெள்ளை பூஞ்சை பாதிப்பும் தற்போது ஏற்படுகிறது.