சாலையோர வியாபாரிகள் ஸ்விக்கியில் உணவு விற்பனை செய்ய அரசு திட்டம்!

சாலையோர வியாபாரிகள் தயாரிக்கும் உணவை ஸ்விக்கி வாயிலாக இணையதளத்தில் விற்பனை செய்திடும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டம் சென்னையில் அமல்படுத்தப்படும் எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதன்படி 8,183 பேர் இந்தத் திட்டத்தின்கீழ் கடன் பெற இதுவரை விண்ணப்பித்து உள்ளதாகவும், அவற்றில் 1,784 நபர்களுக்கு இதுவரை பல்வேறு வங்கிகளின் மூலம் கடன் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் கடன் பெறத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.