இலவச உணவு தானியங்கள் நவம்பர் வரை வழங்கப்படும்

பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ், இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டத்தை, மேலும் ஐந்து மாதங்களுக்கு நீட்டிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சரவை கூட்டத்துக்கு பின் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது:இலவச உணவு தானிய திட்டம், நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு நபருக்கு மாதம், 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்.

இதனால், 81 கோடியே, 35 லட்சம் பேர் பலனடைவர். இதன் மொத்த செலவையும், மத்திய அரசே ஏற்றுக் கொள்கிறது. இதனால், அரசுக்கு, 67 ஆயிரத்து, 266 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.