பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ், இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டத்தை, மேலும் ஐந்து மாதங்களுக்கு நீட்டிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அமைச்சரவை கூட்டத்துக்கு பின் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது:இலவச உணவு தானிய திட்டம், நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு நபருக்கு மாதம், 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்.
இதனால், 81 கோடியே, 35 லட்சம் பேர் பலனடைவர். இதன் மொத்த செலவையும், மத்திய அரசே ஏற்றுக் கொள்கிறது. இதனால், அரசுக்கு, 67 ஆயிரத்து, 266 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.