டிஜிபி ஆக பதவி உயர்வு !

தமிழகத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர்கள் உட்பட 5 பேருக்கு டிஜிபி-யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உட்பட ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஷ் குமார், டி.வி.ரவிசந்திரன், சீமா அகர்வால் ஆகிய 5 பேருக்கு டிஜிபி பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவர் ஏ.கே.விஸ்வநாதன், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு ஏடிஜிபி ஆபாஷ்குமார், அயல் பணியில் இருக்கும் ஏடிஜிபி ரவிச்சந்திரன் ஆகியோருக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் 4 அதிகாரிகள் பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேருக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இன்றைய ராசி பலன் !