Crime: 2 மகள்களையும், மனைவியையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்த தந்தை

கள்ளக்காதலனை கொன்ற கணவர்
கள்ளக்காதலனை கொன்ற கணவர்

Crime: நாகப்பட்டினத்தில், புதுச்சேரி கிராமத்தை சேர்ந்த ஒருவர், தன் மனைவி மற்றும் இரண்டு மகள்களின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கொலை செய்துவிட்டு, தந்தையும் தற்கொலை செய்திருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் புதுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (55). வீட்டிலேயே டீ மற்றும் டிபன் கடை நடத்தி வந்திருக்கிறார் லட்சுமணன். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 45). இவருக்கு தனலட்சுமி (வயது 21), வினோதினி (வயது 18), அட்சயா (வயது 15) என மூன்று மகள்கள் இருந்துள்ளனர். இவர்களில் மூத்த மகள் தனலட்சுமி, பெற்றோரின் கடும் எதிர்ப்பை மீறி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அதேகிராமத்தை சேர்ந்த விமல்ராஜ் என்பவரை திருமணம் செய்து அவரோடு அதேகிராமத்தில் தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த 4 தினங்களாக டீக்கடையை திறக்காமல் சோகமாக இருந்து வந்துள்ளார் லட்சுமணன். வழக்கமாக காலை 7 மணியளவில் கடையும் திறக்கும் அவர், 4 தினங்களாகியும் டீக்கடையை திறக்காததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் சத்தம் எழுப்பியதுடன், கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழ்வேளூர் போலீசார், வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது 4 பேர் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. விசாரணையில் லட்சுமணன், அவரது மனைவி புவனேஸ்வரி மற்றும் இரண்டு மகள்கள் வினோதினி, அட்சயா ஆகியோரை ஆட்டுக்கல்லை தலையில் போட்டு கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

சம்பவ இடத்தில் நாகை எஸ்பி ஜவஹர் நேரில் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, நால்வரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் அறிந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டு வரும் நிலையில், சம்பவ இடத்தில் மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மூத்த மகளின் காதல் விவகாரத்தால் லட்சுமணன் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்தார் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

father killed 2 daughter and wife in nagapattinam and committed suicide

இதையும் படிங்க: Alia Bhatt: ‘கங்குபாய்‘ படத்திற்கு சிக்கல்