வங்கி ஊழியர்கள் மிரட்டியதால் விவசாயி தற்கொலை

குளித்தலை அருகே டிராக்டர் கடன் தவணையை கட்ட தவறிய விவசாயியை வங்கி ஊழியர்கள் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பகுதியில் வசித்து வந்தவர் விவசாயி வடிவேல்( 38). இவர் அங்குள்ள வங்கியில் டிராக்டன் கடன் பெற்றுள்ளார்.

இதற்கான கடன் தவணையைக் கட்டத் தவறியதால் வங்கி ஊழியர் இவரை மிரட்டியதாகத் தெரிகிறது.

அவமானப்படுத்தி திட்டியதால் மனமுடைந்த விவசாயி வடிவேல் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.