பிரபல ஜோதிடர் காலமானார்

தமிழக அளவில் பிரபலமானவர் ஜோதிடர் நெல்லை வசந்தன். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் பல காலமாக ஜோதிடராக உள்ளார். தன்னை நாடி வருபவர்களுக்கு ஜோதிடம் பார்ப்பதோடு அதற்கான பரிகாரங்களையும் கூறினார்.

இவரது ஜோதிட கணிப்பாலும் உண்மையையே பேசுவதாலும் இவரை நாடி சென்றவர்களின் எண்ணிக்கை பெருவாரியாக கூடியது.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவரிடம் ஜோதிடம் பார்ப்பதற்கு தமிழகம் முழுவதும் இருந்தும் மக்கள் சென்றுள்ளனர். இந்த நிலையில், ஜோதிடர் நெல்லை வசந்தன் காலமானார். இது அவரது தரப்பினர் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலரும் அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க நெல்லை விரைந்தனர்.

பல தொடர் டிவிகளிலும் பங்கேற்று ராசிபலன் மற்றும் ஜோதிடம் கூறி வந்துள்ளார் ஜோதிடர் நெல்லை வசந்தன். தமிழகத்தில் நிகழும் சம்பவங்கள், வரபோகும் நிகழ்வுகள் குறித்தும் பலமுறை ஜோதிடர் நெல்லை வசந்தன் கணித்து கூறியுள்ளார்.

அண்மையில் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் கூறுகையில், கடக ராசிக்கு கண்டச்சனி காலமாக இருப்பதால்தான் கனமழை கொட்டி சென்னை, குமரி, டெல்டாவின் கடலோர மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதாக ஜோதிடர் நெல்லை வசந்தன் கணித்துள்ளார். மகர ராசியில் உள்ள சனிபகவானின் பார்வை கடக ராசியின் மீது விழுவதால் பெருவெள்ளம் ஏற்பட்டு மக்கள் தவித்து வருவதாகவும் ஜோதிடர் கணித்து கூறியிருந்தார்.

ஜோதிடம், ஆன்மீகம் என இல்லாமல் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பலருக்கு உதவியும் செய்து மக்களின் மனர் கவந்த ஜோதிடராக நெல்லை வசந்தன் இருந்துள்ளார். இந்த நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.