சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள எதற்கும் துணிந்தவன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு !

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ வரும் பிப்ரவரி 4 அன்று வெளியாகவுள்ளது.

இந்த படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார்.மேலும் இதில் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இமான் இசை அமைக்கிறார்.தற்போது இந்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியிடப் படக்குழு தீர்மானித்துள்ளது.