தமிழகத்தில் 11 ம் வகுப்பு நுழைவு தேர்வு ரத்து !

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,இந்த ஆண்டு 11 ம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை நேற்று பள்ளி பள்ளித்துறை வெளியிட்டது.

அதில் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்தலாம் எனத் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பல்வேறு தரப்பினர் கோரிக்கையை ஏற்று 11-ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், ஒரே பாடப்பிரிவில் அதிக விண்ணப்பம் வந்தால் 9-ம் வகுப்பு மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு பாடப்பிரிவு ஒதுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.