விவசாயி ஒருவர் பிரதமர் மோடியின் தாய்க்கு கடிதம் எழுதியுள்ளார்!

மத்திய அரசு பிறப்பித்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும்,விவசாயிகளுடனான அரசின் பேச்சு வார்த்தைகளுக்கும் தோல்வியில் முடிந்தது.

பஞ்சாப் விவசாயி ஓருவர் பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீரா பென்னுக்கு புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தங்கள் மகனிடம் கூறுங்கள் என்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் இருப்பது,மிகுந்த கனத்த இதயத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, உணவளிக்கும் அன்னதாதாக்களான விவசாயிகள் டெல்லி சாலையில் கருப்புச் சட்டங்களை எதிர்த்து கடும் குளிரில் துாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்படி, தங்கள் மகனிடம் நீங்கள் வலியுறுத்த வேண்டும்.இந்தப் போராட்டத்தில் 90-95 வயதுடைய முதியோர்கள் உள்ளனர். குழந்தைகள், பெண்கள் உள்ளனர். குளிரினால் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. சிலர் உயிரைவிடவும் நேரிடுகிறது. விவசாயிகள் இந்தச் சட்டங்களினால் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்கள். இதில் திருத்தங்களை நாங்கள் கோரவில்லை, சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.

ஒருவர் பிரதமராக இருக்கலாம் ஆனால் தாய்க்கு மகன் தான், இந்த நாட்டில் தாயாரை தெய்வமாக வழிபடுகிறோம். அதனால் நீங்கள் விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரினால் அவர் மறுக்க முடியாது.உங்களால் இந்தச் சட்டங்கள் ரத்து ஆனால் நாடே உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கும். ஒரு மகனின் காதைத்திருகி தாய் மட்டுமே அறிவுரை வழங்க முடியும். இந்தச்சட்டங்களை திரும்பப் பெற்றால் அது தேசத்தின் வெற்றி, இதனால் யாரும் தோற்கப்போவதில்லை என பகிர்ந்துள்ளார்.