பாடங்களை 30 சதவீதம் குறைக்க தமிழக அரசு முடிவு

9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடங்களை 30 சதவீதம் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு 30 சதவீதம் பாடத்திட்டங்களை குறைத்துதான் வகுப்புகள் எடுக்கப்பட்டன. ஆனால் தேர்வு நடத்தப்படாததால் ‘ஆல் பாஸ்’ அறிவிக்கப்பட்டது.

தற்போது சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை 30 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

எனவே தமிழக அரசும் கடந்த ஆண்டைபோல் 30 சதவீத பாடத்திட்டங்களை குறைத்து அறிவிப்பு வெளியிடும் என தெரிகிறது.