முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கிக் கணக்கு முடக்கம் !

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

அதிமுக ஆட்சியில் முறைகேடான முறையில் மாநகராட்சி ஒப்பந்தங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு எஸ்.பி.வேலுமணி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் நடந்த சோதனையில் 13 லட்சம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

எஸ்.பி.வேலுமணியின் நண்பர் அலுவலகத்தில் நீடிக்கும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.தற்போது எஸ்.பி.வேலுமணியின் வங்கிக் கணக்கு மற்றும் லாக்கர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் முடக்கப்பட்டுள்ளது.