தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக கள்ளக்குறிச்சி,வேலூர், நாமக்கல், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளில் விடுமுறை அளித்து அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார். மேலும் மயிலாடுதுறை, விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு ஏற்கனவே 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்