புனேவில் தொடங்கும் ஷங்கர் – ராம் சரண் படப்பிடிப்பு

இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் இணையும் ’ராம் சரண் 15’ படத்தின் படப்பிடிப்பு வரும் 21 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.

இயக்குநர் ஷங்கர் ‘ராம் சரண் 15’ படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ஜானி மாஸ்டர் கொரியோகிராஃபி செய்கிறார். தமன் இசையமைக்கிறார். ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி நடந்த இப்படத்தின் பூஜையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், இயக்குநர் ராஜமெளலி, சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். 170 கோடியில் இப்படம் உருவாகிறது. இந்த நிலையில், இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி புனேவில் தொடங்கவிருக்கிறது.

இதையும் படிங்க: 72 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை