தோனி கூறுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது – ஸ்ரீகாந்த்

தோனி கூறுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீகாந்த் கூறி உள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் படுதோல்வியை சந்தித்த சென்னை அணி பிளே ஆஃப்-க்கான வாய்ப்பைஏறக்குறைய இழந்துவிட்டது.

தோல்வி குறித்து தோனி கூறும் போது அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு போதிய உத்வேகம் இல்லை. அதனால்தான் அவர்களை களமிறக்கவில்லை. ஆனால் இனி வரும் ஆட்டங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அவர்கள் களமிறக்கப்படுவார்கள். இனி வரும் போட்டிகளில் அவர்கள் அழுத்தம் இல்லாமல் விளையாடலாம் என கூறினார்.

அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு போதிய உத்வேகம் இல்லை என்ற தோனியின் கருத்துக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இது குறித்து கூறியதாவது, இளம் வீரர்களிடம் உத்வேகம் இல்லை என டோனி எப்படி கூற முடியும். ஜெகதீஷிடம் இல்லாத உத்வேகத்தையா கேதர் ஜாதாவிடமும், பியூஷ் சாவ்லாவிடமும் பார்த்து விட்டார். தோனி சிறந்த வீரர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவர் கூறுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார்.