Bomb Found: டில்லி காசிபூர் பூ மார்கெட்டில் மர்ம பையில் இருந்து வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை நிபுணர்கள் தகுந்த பாதுகாப்புடன் செயலிழக்க செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
டில்லி காசிபூர் பூ மார்கெட் பகுதியில் வெடிகுண்டுகளுடன் கூடிய பை கண்டுபிடிக்கப்பட்டது. பையில் இருந்த வெடிகுண்டுகளை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். வெடிகுண்டு கண்டறியப்பட்ட இடத்தை சுற்றிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மார்கெட்டில் வெடிகுண்டை வைத்தது யார் என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பரபரப்பாக காணப்படும் பூ மார்கெட்டில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: Nun rape case: கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் கேரள பாதிரியார் விடுவிப்பு