தீபாவளிக்கு ரூ.431 கோடிக்கு மதுபானம் விற்பனை

தீபாவளி கொண்டாட்டம் காரணமாக இரண்டே நாளில் டாஸ்மாக்கில் ரூ.431 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கரோனா தாக்கம் குறைந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இரண்டே நாட்களில் 431.03 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.

தலைநகரான சென்னையில் மட்டும் ரூ.79.84 கோடிக்கும், கோவையில் ரூ.74.46 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு தீபாவளியில் மட்டும் ரூ.467.69 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரஜினியின் ‘அண்ணாத்த’ ஒரே நாளில் 34 கோடி ரூபாய் வசூல்