இந்தியாவுக்கு வரும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி

பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த தடுப்பூசிக்கு இந்தியாவில் பரிசோதனை தேவையில்லை என்று மத்திய அரசு கூறியதாகவும்அந்நிறுவனம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வேகமாக பரவி வரும் டெல்டா வகை கோவிட் தொற்று மற்றும் சார்ஸ் வைரஸ் எனப்படும் தீவிர சுவாசக் கோளாறு நோய்களுக்கு எதிராக வீரியத்துடனும் மற்றும் நீடித்து செயல்படுவதை தரவுகள் நிரூபிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஒரே தவணை தடுப்பூசிக்கான நோய் எதிர்ப்பு திறன், 8 மாதம் வரை நீட்டிப்பதாகவும் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி, 85 சதவீதம் பயனுள்ளதாகவும், தென் ஆப்ரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் ஆய்வு செய்யப்பட்டதில், வேகமாக பரவி வரும் பீட்டா மற்றும் ஜீட்டா வகை தொற்றுகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது என அந்நிறுவனம் கூறியுள்ளது.