Corona Virus: கண் விழித்திரையில் பெருகிக்கொள்ளும் தன்மை கொண்டது கொரோனா வைரஸ்

covid cases
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் தலைதூக்கும் கொரோனா

Corona Virus: ஜெர்மனியில் அண்மையில் நடைபெற்ற ஆய்வில் கண் விழித்திரையில் கொரோனா வைரஸ் தன்னை பெருக்கிக் கொள்ளூம் தன்மை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் கண்கள் மூலம் உடலுக்குள் நுழையும் தன்மை கொண்டிருப்பது நாம் அறிந்திருப்போம் ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் புதிய தகவல் என்னவென்றால், கொரோனா வைரஸ் எப்படி நுரையீரல் செல்களில் ஒட்டிக் கொண்டு தன்னை பன்மடங்கு பெருக்கிக் கொண்டதோ, அதே போல் விழித்திரையிலும் பெருக்கிக் கொள்ளும் தன்மையை கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனியில் உள்ள மாக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் மாலிகுலர் பயோமெடிசின் மற்றும் வெஸ்ட்ஃபாலிஸ்ச் வில்ஹெல்ம்ஸ்-யுனிவர்சிட்டட் மன்ஸ்டர் ( Max Planck Institute for Molecular Biomedicine and Westfalische Wilhelms-Universitat Munster) ஆகிய நிறுவனங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதற்காக மனித விழித்திரை செல்கள் போன்ற செல்களை உருவாக்கி அதில் கொரோனா வைரஸ் செலுத்தி தொற்றை உருவாக்கியிருக்கின்றனர். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த செல்களை அளவிட்டுப் பர்க்கும்போது அதில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் விழித்திரையில் கொரோனா வைரஸ் தன்னை பெருக்கிக்கொள்ளும் தன்மை பெற்றிருப்பது உறுதியாகியிருக்கிறது.

ஆனால் வைரஸ்கள் கண்களில் பெருக்கிக் கொள்வது இது புதிதல்ல என்றும் , ஏற்கெனவே வேறு சில வைரஸ்களும் இதுபோன்ற தன்மையை பெற்றிருந்ததாகவும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர் வசந்தா தெரிவித்துள்ளார். விழித்திரையில் கொரோனா வைரஸ் இல்லாத போதே ரத்த குழாய் அடைப்பு காரணமாக கண்களில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், தற்போது விழித்திரையிலேயே பெருக்கிக் கொள்ளும் தன்மை பெற்றிருப்பதால் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்றும் அவர் கூறுகின்றார்.

இதையும் படிங்க: உப்புமாவில் விஷம் வைத்து குழந்தையை கொன்ற தாய்