national news : மக்களே உஷார்..அடுத்த இரண்டு வாரங்களுக்கு அதிகரிக்கும் கொரோனா !

national news : மக்களே உஷார்..அடுத்த இரண்டு வாரங்களுக்கு அதிகரிக்கும் கொரோனா
மக்களே உஷார்..அடுத்த இரண்டு வாரங்களுக்கு அதிகரிக்கும் கொரோனா

national news :  புதிய கொரோனா மாறுபாடான ஓமிக்ரான் மாறுபாட்டைக் கட்டுப்படுத்த உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.பல ஐரோப்பிய நாடுகள் மிகவும் தொற்றுநோயான புதிய கொரோனா வைரஸ் தொற்றை உறுதிசெய்துள்ளன.

ஓமிக்ரான் கோவிட்-19 மாறுபாடு, கொரோனா வைரஸின் மிக மோசமான ஒன்று என்று தெரிவித்துள்ளனர்.இது தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்று தெரிவித்துள்ளனர்.COVID-19 இன் பீட்டா மாறுபாட்டில் காணப்படும் தடுப்பூசி-எதிர்ப்பு மாற்றங்களையும் Omicron மாறுபாடு உள்ளடக்கியது.national news

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கொரோனா பரவல் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு தகவல் அளித்துள்ளது. இந்தியா முதலான பல நாடுகளில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா பரவல் உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளது என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.