Corona virus : கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் இதுவரை வெற்றிகரமாக கெரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று அதில் நிறைய மக்கள் இலவச தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டனர்.

தமிழகத்தில் இன்று 105 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,51,815..Corona virus
இதையும் படிங்க : TNPSC: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
சென்னையில் 39 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை: 43,039.Corona virus
இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் எந்த உயிரிழப்பும் இல்லை. இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,023 ஆக உள்ளது.மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,614 புதிய கோவிட் -19 வழக்குகள் மற்றும் 89 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதற்கிடையில், செயலில் உள்ள கோவிட் வழக்குகள் 40,559 ஆக குறைந்துள்ளன.
( covid virus cases daily updates )



