பல மாவட்டங்களில் தடுப்பூசி பற்றாக்குறை

சென்னை, திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இன்று தடுப்பூசி செலுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு இதுவரை 1 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் தற்போது 3 லட்சத்துக்கு 42 ஆயிரத்து 820 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பு உள்ளன.

கையிருப்பு உள்ள தடுப்பூசிகள் 20.07.2021 அன்று மதியம் வரை மட்டுமே வரும் என தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். எனவே நாளை பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பாட வாய்ப்புள்ளது.