கொரோனா 3வது அலைக்கு 8 மாதங்களாகும்

இந்தியாவில் கொரோனா 3வது அலைக்கு 8 மாதங்களாகும் என கணிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமது மாதாந்திர வானொலி உரையான மன் கீ பாத் நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “தடுப்பூசி போட தயக்கம் காட்டுவது ஆபத்தானது. எனவே மக்கள் அச்சத்தை துறந்து விட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

கொரோனா 3வது அலை இந்தியாவை தாக்க இன்னும் 8 மாதங்களாகும் என மத்திய அரசின் சிறப்பு குழு கணித்துள்ளது. அறிவியலையும், நமது விஞ்ஞானிகளையும் நம்ப வேண்டும். எனவே தடுப்பூசி பற்றிய எதிர்மறையான வதந்திகளை நம்பாதீர்கள். அச்சங்களை கைவிட்டு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் பெரிய பாதிப்பு இருக்காது. கொரோனாவுக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்கிறது” எனக் கூறினார்.