கொரோனா நிவாரண நிதி 2 வது தவணை டோக்கன் விநியோகம் !

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் தமிழக அரசு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 அறிவித்தது.

இதன் முதல் தவணை ரூபாய் 2000 கடந்த மாதம் வழங்கப்பட்டது.இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அரிசி பெறும் குடும்ப அட்டை தாரா்கள் அனைவருக்கும் வரும் ஜூன் 15 முதல் 2ஆம் கட்ட கொரோனா நிவாரணத் தொகை ரூ.2000 மற்றும் 14 வகையான இலவச மளிகைப் பொருள்கள் விநியோகம் தொடங்கவுள்ளது.

மேலும் ரேஷன் கடைகளில் இதற்கான டோக்கன் இன்று முதல் முதல் வரும் 14ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்ய உள்ளனர்.