தமிழகத்தில் போல புதுவையிலும் கரோனா நிவாரண நிதி மக்களுக்கு அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் கொரோனா நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி 2 வாரங்களுக்கு முன்பு அறிவித்தார்.
இந்நிலையில், புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்த நிவாரணம் முதல் தவணை ரூ.1500 வங்கிக்கணக்கில் செலுத்தும் பணி தொடங்கியது.
அரிசி ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணை ரூ.1500 கிடைக்கும் என அம்மாநில அரசு ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.