கொரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணை ரூ.2,000 மற்றும் 14 மளிகை பொருட்கள் இன்று முதல் விநியோகம் !

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனை தடுக்க தமிழக அரசு ஊரடங்கை அறிவித்தது.இந்த ஊரடங்கில் மக்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு ரூபாய் 4000 நிவாரண தொகையாக அரிசி அட்டைத்தாளர்களுக்கு அறிவித்தது.இதன் முதல் தவணை ரூபாய் 2000 கடந்த மாதம் கொடுக்கப்பட்டது.

இதன் இரண்டாம் தவணைக்கான டோக்கன் கடந்த 11ஆம் தேதி முதல் வழங்கப்பட்டது.எனவே இன்று முதல் பணமும் ,14 வகை மளிகைப்பொருட்களை ஒரு பையில் போட்டு கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.