தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

சென்னையில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இருப்பினும் நோய் பரவல் அதிகரிக்கவில்லை. தொடர்ந்து தினசரி பாதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் நேற்று 165 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் 171 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

கடலூரில் 81 பேருக்கும், தர்மபுரியில் 52 பேருக்கும், அரியலூரில் 26 பேருக்கும் நேற்று நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் 24 பேரும், கள்ளக்குறிச்சியில் 66 பேரும், காஞ்சிபுரத்தில் 39 பேரும், கன்னியாகுமரியில் 49 பேரும், கரூரில் 21 பேரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

கிருஷ்ணகிரியில் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரையில் 33 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் 24 பேரும், நாகப்பட்டினத்தில் 44 பேரும், நாமக்கல்லில் 80 பேரும், நீலகிரியில் 84 பேரும், பெரம்பலூரில் 12 பேரும், புதுக்கோட்டையில் 37 பேரும், ராமநாதபுரத்தில் 19 பேரும், ராணிப்பேட்டையில் 37 பேரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

சென்னையை பொறுத்தவரையில் தினமும் அதிகம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வருகிறார்கள். அந்த வகையில் இதுவரை 5 லட்சத்து 25 ஆயிரத்து 336 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் 1,680 பேர் மட்டுமே ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகம் முழுவதும் 33,454 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சென்னையில் 8,252 பேர் பலியாகி இருக்கிறார்கள்.