சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பட்டி பாண்டுரங்க நாதர் தெருவில் வசித்து வருபவர் கணேசன். இன்று காலை சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துட வெடித்து சிதறியுள்ளது.
இந்த விபத்தில் கணேசன், கோபி, தீயணைப்பு அலுவலர் பத்மநாபன், வெங்கட்ராஜன் ஆகியோரது வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது.
சம்பவம் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில்,இடிபாடுகளில் இருப்பவர்களை மீட்க தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டனர்.