கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு..ஆகஸ்ட் 1 முதல் மாணவர் சேர்க்கை !

கொரோனா தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன.மேலும் கடந்த ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன.

தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இந்த ஊரடங்கில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.