Free Ration Scheme: 3 மாதம் ரேஷன் இலவசம்..!

ரேசன் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய குழு அமைப்பு
ரேஷன் கடை

Free Ration Scheme: இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

நடந்து முடிந்த உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஆளும் பாஜக, 255 தொகுதிகளில் வெற்றிப் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. இதன்படி, தொடர்ந்து இரண்டாவது முறையாக உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி அமர்ந்துள்ளது. எதிர்க்கட்சியான சமாஜ்வாடி 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் நேற்று, தலைநகர் லக்னோவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சியில், உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ந்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க: Crime: மூன்று பேரிடம் ஒரே வீட்டை லீசுக்கு விட்டு ஏமாற்றிய தரகர் கடத்தல்

அவருக்கு, ஆளுநர் ஆனந்தி பென் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும், கேசவ் பிரசாத் மெளிரயா, பிராமண தலைவர் பிரஜேஷ் பதக் ஆகியோர், துணை முதலமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து அமைச்சரவையும் பதவி ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில் இன்று, லக்னோவில் உள்ள தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஏழைகளுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டம் முடிந்த பின்னர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் மார்ச் மாதத்துடன் நிறைவு பெற இருந்தது. இதனால் 15 கோடி பேர் பயன் பெற்று வந்தனர். இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், அந்த திட்டத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். துணை முதலமைச்சர் சேகவ பிரசாத் மவுரியா கூறுகையில், இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு அரசு 3,270 கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: MK Stalin: மு.க.ஸ்டாலின் இன்று மாலை அபுதாபி செல்கிறார்