Chitra Ramkrishna: தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதன் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா டெல்லி திகார் சிறையில் 14 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக வீட்டில் சமைக்கப்பட்ட உணவை சிறையில் தனக்கு வழங்க அனுமதிக்க வேண்டும் என்ற சித்ரா ராமகிருஷ்ணாவின் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்திருந்தது. சித்ரா ராமகிருஷ்ணா விஐபி கைதி அல்ல என்றும், எனவே அவருக்கு சிறையில் சிறப்பு வசதிகள் தரப்படாது என்றும் நீதிபதி சஞ்சீவ் அகர்வால் தெரிவித்தார்.
எனினும் மருந்துகள், பிரார்த்தனை புத்தகங்களை சிறைக்கு எடுத்துச்செல்ல நீதிபதி அனுமதித்தார். பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ ஒரு வாரம் விசாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Chitra Ramkrishna remanded to 14-day judicial custody in NSE irregularities case
இதையும் படிங்க: Government Employees: அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை