தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !

கனமழைக்கு வாய்ப்பு
கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக, இன்று தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கலியல் பகுதியில் 17 செ.மீ., குழித்துறையில் 15 செ.மீ., சூரலக்கோட்டில் 14 செ.மீ., தக்கலையில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : தமிழக முதல்வர் இல்லம் முன்பு ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி !