Weather Update: டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

TN Rain
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

Weather Update: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக பகுதியின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் குமரி, நெல்லை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (19.3.2022) அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் குமரி, நெல்லை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், மதுரை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானாது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

20.3.2022 முதல் 22.3.2022 வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானாது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: TN Budget 2022: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 24-ம் தேதி வரை நடைபெறும் – சபாநாயகர்