புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாட்டின் பல மாநிலங்களிலும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.சி-யும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக சென்ற வாரம் அறிவித்தது.

தற்போது புதுச்சேரியிலும் (Puducherry) 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று அறிவித்துள்ளார்.

முன்னதாக, கொரோனா தொற்று பரவலைக் கருத்தில்கொண்டு தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக சனிக்கிழமையன்று தமிழக அரசு அறிவித்தது.