கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது..!

சிறுபான்மையினரின் நலன் காத்த கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என இனிக்கோ இருதய ராஜ் பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பேசுகையில், “தமிழகத்தில் நேர்மையான திறமையான ஆட்சியர்களை தன் சிறப்பு செயலாளராக பொருபளித்து சீரிய நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் எடுத்து வருகிறார். கொரோனா தொற்று கட்டுப்படுத்தி மக்களின் வாழ்வை காத்து தமிழ் தேசத்தின் தந்தையாக முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்.

சிறுபான்மையினரின் நலன் காத்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.