Man killed wife: மனைவியை கொன்று புதைத்த கணவன்..!

மனைவியை கொன்று புதைத்த கணவன்
மனைவியை கொன்று புதைத்த கணவன்

Man killed wife: மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சாரியா ஓரான் என்ற பெண் கடந்த ஜனவரி 25-ந்தேதி அன்று காணாமல் போனார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் லதாகுரி போலீசில் புகாரளித்தனர்.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சந்தேகத்தின் பேரில் கூலித் தொழிலாளியான அந்தப் பெண்ணின் கணவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது விசாரணையின் போது அந்தப் பெண்ணின் கணவன் அவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிராந்தி பிளாக்கில் உள்ள 5-வது கம்பார்ட்மென்ட் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்த அந்தப் பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

இதையடுத்து அந்த நபரிடம் மனைவியை கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: BJP: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டி