வரலாற்றில் மிகக்குறைந்த ரன்னை எடுத்த இந்தியா

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கும் தொடக்க வீரர்கள் மேத்யூ வேட் – ஜோ பர்ன்ஸ் இணை சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இதில் மேத்யூ வேட் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெவிலியன் திரும்ப, அவரைத் தொடர்ந்து வந்த லபுசாக்னேவும் 6 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.

இருப்பினும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ பர்ன்ஸ் அரைசதம் கடந்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ பர்ன்ஸ் 51 ரன்களை எடுத்தார்.