தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு !

up-election-2022-voting-live-updates-up-assembly-election-phase-7-vote
வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது என என இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ,டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா செய்தியாளர்களிடம் கூறியது, தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை மார்ச் 12ம் தேதி முதல் தாக்கல் செய்யலாம். வேட்பு மனுவை திரும்ப பெற மார்ச் 19ம் தேதி கடைசி நாளாகும்.

மார்ச் 20ம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும்.மேலும் வேட்பு மனுவை திரும்ப பெற மார்ச் 22ம் தேதி கடைசி நாளாகும்.தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்வு முடிவுகள் மே 2ம் தேதி வெளியாக உள்ளது என கூறினார்.